கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.
""வள்ளிக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது தெரியுமா?'' என்று கேட்டார் வாரியார்.
கூட்டத்தில் அமைதி நிலவியது. வாரியார் கூட்டத்தை நோக்கிச் சிரித்துக்கொண்டே, ""முருகப் பெருமான் பக்தர்கள் கேட்டதையெல்லாம் தருகின்ற வள்ளல்!.... அந்த வள்ளலின் மனைவியாக இருப்பதனால் வள்ளி என்று பெயர் பெற்றாள்'' என்று கூறியவுடன் பலத்த கைதட்டல் ஒலி அதிர்ந்தது!
மலரடியான்.