முகப்பு
சிறுவர்மணி

நெசவு!

பாயை விரித்த காட்சி போல் பாவும் விரியும் தறியிலே!பாயும் கணையைப் போலவே 

Updated On : 10 ஏப்ரல் 2021, 6:00 am IST
பகிர்:

பாயை விரித்த காட்சி போல் 
பாவும் விரியும் தறியிலே!
பாயும் கணையைப் போலவே 
நாடா நுழையும் நடுவிலே!

இழைகள் கோர்த்த விழுதுகள்
ஏறி இறங்கும் வேளையில்
வழி கிடைக்கும் நுழைந்திட 
நூலைப் பின்னும் நெசவிலே!

காடிப் பசையின் முறுக்குடன் 
காடாத் துணியும் நெய்கிறார்!
போடுகின்ற சாயத்தில்
புது வண்ணத்தில் நெய்கிறார்!

Advertisement

Advertisement

வெண்பருத்திப் பஞ்சு நூல்
பாவாய் மாற்றும் ராட்டினம்!
கண் பறித்து அழகுடன் 
துணியாய் மாறும் நெசவிலே!

வேட்டி சேலை துண்டுகள்!
விதவிதமாய்ப் போர்வைகள்!
ஓட்டும் தறியில் நெய்கிறார்!
உழைப்பைப் போற்றி வணங்குவோம்!

சேலையோரம் புதுவகைக் 
கோலம் நெசவில் வரைகிறார்!
வேலையல்ல, நெசவென்றால் 
விழியைக் கவரும் கலையன்றோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments