சிறுவர்மணி

நெசவு!

பாயை விரித்த காட்சி போல் பாவும் விரியும் தறியிலே!பாயும் கணையைப் போலவே 

சி.விநாயகமூர்த்தி

பாயை விரித்த காட்சி போல் 
பாவும் விரியும் தறியிலே!
பாயும் கணையைப் போலவே 
நாடா நுழையும் நடுவிலே!

இழைகள் கோர்த்த விழுதுகள்
ஏறி இறங்கும் வேளையில்
வழி கிடைக்கும் நுழைந்திட 
நூலைப் பின்னும் நெசவிலே!

காடிப் பசையின் முறுக்குடன் 
காடாத் துணியும் நெய்கிறார்!
போடுகின்ற சாயத்தில்
புது வண்ணத்தில் நெய்கிறார்!

வெண்பருத்திப் பஞ்சு நூல்
பாவாய் மாற்றும் ராட்டினம்!
கண் பறித்து அழகுடன் 
துணியாய் மாறும் நெசவிலே!

வேட்டி சேலை துண்டுகள்!
விதவிதமாய்ப் போர்வைகள்!
ஓட்டும் தறியில் நெய்கிறார்!
உழைப்பைப் போற்றி வணங்குவோம்!

சேலையோரம் புதுவகைக் 
கோலம் நெசவில் வரைகிறார்!
வேலையல்ல, நெசவென்றால் 
விழியைக் கவரும் கலையன்றோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அண்ணா எனும் பசுமாடு..! DMK எனும் காக்கா..!" அண்ணாமலை

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்! அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரிக்கை!

”விஜய்யிடம் முதலில் என்ஜின் இருக்கா?” தவெகவை விமர்சித்த அண்ணாமலை

அண்ணாவின் நினைவுநாள்! எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

உச்ச நீதிமன்றத்தில் நாளை மமதா பானர்ஜி வாதிடுவார்!

SCROLL FOR NEXT