புத்தாண்டே வருக!
சித்திரை பிறந்ததுநித்திரை கலைந்தது!இத்தரை குளிர்ந்தது!
சித்திரை பிறந்தது
நித்திரை கலைந்தது!
இத்தரை குளிர்ந்தது!
முத்திரை பதித்தது!
பூசல்கள் மறைந்திட
பொறாமை அகன்றிட
நேசமும் நிலைத்திட
நீ வரம் தந்திடு!
வானமும் பொழிந்திட
வையகம் செழித்திட
தானமும் தழைத்திட
தரணியில் வந்திடு!
Advertisement
Advertisement
அன்புடன் பழகிட
அமைதியும் தவழ்ந்திட
இன்பமே நிறைந்திட
விரைந்து நீ வந்திடு!
நல்லவர் வாழ்த்திட
நானிலம் செழித்திட
வறுமை அகன்றிட
வருக நீ வருகவே!
சேவைகள் தொடர்ந்திட
தேவைகள் நிறைத்திட
புதுமைகள் மலர்ந்திட
புத்தாண்டு வருகவே!
ஆக்கமும் நடைபெற
அறிவியல் உதவிட
ஊக்கத்தை அளித்திட
புத்தாண்டே புறப்படு!
வளம் பல பெருகிட
வாய்ப்புகள் குவிந்திட
"பிலவ' நீ வந்திடு
பல வரங்கள் கொடு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.