பயனில சொல்லாமை
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.
அறத்துப்பால் - அதிகாரம் 20 - பாடல் 8
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
- திருக்குறள்
அரிய பயனை ஆராய்ந்து
பேசும் அறிவு கொண்டவர்
பெரிய பயன் இல்லாத
சொல்லைப் பேசமாட்டார்கள்
Advertisement
எந்தச் சொல்லைச் சொன்னாலும்
என்ன பயன் என்றுணர்ந்து
நல்லவற்றைப் பேசியே
நல்ல புகழ் பெற்றிடுவோம்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்