சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

கரியமில வாயு (கார்பன்-டை ஆக்ûஸட்) உடலுக்கும் உலகுக்கும் கேடு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த வாயுவை எங்கேயாவது கொண்டு போய் நமக்குப் பாதிப்பு வராதவாறு செய்ய முடியாதா?

தினமணி

கேள்வி: கரியமில வாயு (கார்பன்-டை ஆக்ஸைட்) உடலுக்கும் உலகுக்கும் கேடு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த வாயுவை எங்கேயாவது கொண்டு போய் நமக்குப் பாதிப்பு வராதவாறு செய்ய முடியாதா?

பதில்: இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, நாம் பூமியின் மேற்புறத்தை கார்பன்-டை ஆக்ஸைடால் நிரப்பி வந்திருக்கிறோம். பலவிதமான எரிபொருள்களால் நாம் இந்தத் தீச் செயலை செய்து வந்திருக்கிறோம்.

திடீரென்று விழித்துக்கொண்டு இந்த வாயுவை அடக்கி வைப்பதற்கு வழிகளைத் தேடுகிறோம்.

கார்பன்-டை ஆக்ஸைட் சேர்ந்துகொண்டே போவதை எப்படியாவது தடுத்தே தீர வேண்டும். அதுதான் எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும். சில ஆராய்ச்சியாளர்கள், இந்த வாயுவை பழைய, பயன்படாத பெட்ரோலியக் கிணறுகளின் ஆழத்தில் கொண்டுபோய் விட்டுவிடலாம் என்றும்; வேறு சிலர் கடலுக்கடியில் மிக ஆழத்தில் கொண்டுபோய் விட்டுவிடலாம் என்றும் கருதுகிறார்கள். ஆனால், அப்படியே கொண்டு போய் புதைத்தாலும் எவ்வளவு காலத்துக்கு அது அங்கேயே இருக்கும் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது என்கிறார்கள். 

கார்பன்-டை ஆக்ஸைடின் தேவையும் உலகிற்கு வேண்டியதிருப்பதால் இதை எப்படிச் செய்து முடிப்பது என்று விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் சீக்கிரம் இதற்கு சரியான வழியைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்புவோம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT