சிறுவர்மணி

ஆறு!

DIN

மலையில் பிறந்து மண்ணில் தவழ்ந்து 
மறிகடல் நோக்கியே ஓடும்!
இலைகள் மரங்கள் இருபுறக் கரைகள் 
எல்லாமும் தாக்கியே சாடும்!

ஆறென விளங்கி அலைபுரள் தண்ணீர் 
அணைகளில் தேங்கிக் கிடக்கும்!
உண்ணச் சோறும், குடிக்க நீரும் 
உதவும் நதி நன்நீரால்!

நெல்லும் கரும்பும் நீளிலை வாழையும் 
நிறைந்து வளர்ந்து செழிக்கும்!
அல்லும் பகலும் ஆற்றின் நன்னீரால் 
அமைதியும் வளமையும் கொழிக்கும்!

ஆறில்லா ஊருக்கு அழகில்லை என்றே 
ஆன்றோர் உரைத்தனர் அன்றே!
நீரில்லா ஆறாய் இருப்பினும் மாசு 
நிறைக்காமல் காப்போம் நாம் நன்றே!
- முத்து முருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT