இலைகள்!
கிளியின சிறிய சிறகென கிளையில் இலைகள் பசுமைதான்தழுவும் காற்றில் சிலிர்க்குது!
கிளியின சிறிய சிறகென
கிளையில் இலைகள் பசுமைதான்
தழுவும் காற்றில் சிலிர்க்குது!
சதங்கை இசையை ஒலிக்குது!
வேம்பின் இலையோ கசப்புதான்
விஷத்தை முறிக்கும் மருந்துதான்
நாம் விருந்து உண்ணவே
வாழை இலைகள் அருமைதான்!
துளசி இலையைத் தின்னலாம்
தொலைந்து போகும் நோய் பல!
குலுங்கும் மாவின் இலைகளால்
தோரணங்கள் கட்டலாம்!
Advertisement
Advertisement
பச்சை வண்ண வெற்றிலை
பாக்கு வெண்சுண்ணாபுடன்
இச்சையோடு சுவைக்கையில்
எந்த வாயும் சிவக்குமே!
கரு வேப்பிலைத் தாளிப்பில்
கமகமக்கும் குழம்பிலே!
அரைத்துப் பூசும் கைகளில்
அழகு சேர்க்கும் மருதாணி
தட்டுப் போன்ற வடிவுள்ள
தாமரையின் இலையிலே
சொட்டு நீரும் தங்கிடா
தழுவி நழுவிக் கொஞ்சுமே!
உதிரும் இலைகள் மரத்திலே
புதியதாகத் துளிர்த்தல்போல்
எதுவும் மாறும் என்பதை
இயற்கை நமக்குக் கூறுது!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.