சிறுவர்மணி

இலைகள்!

சி.விநாயகமூர்த்தி

கிளியின சிறிய சிறகென 
கிளையில் இலைகள் பசுமைதான்
தழுவும்  காற்றில் சிலிர்க்குது!
சதங்கை இசையை ஒலிக்குது!

வேம்பின் இலையோ கசப்புதான் 
விஷத்தை முறிக்கும் மருந்துதான் 
நாம் விருந்து உண்ணவே 
வாழை இலைகள் அருமைதான்!

துளசி இலையைத் தின்னலாம் 
தொலைந்து போகும் நோய் பல!
குலுங்கும் மாவின் இலைகளால் 
தோரணங்கள் கட்டலாம்!

பச்சை வண்ண வெற்றிலை 
பாக்கு வெண்சுண்ணாபுடன் 
இச்சையோடு சுவைக்கையில் 
எந்த வாயும் சிவக்குமே!

கரு வேப்பிலைத் தாளிப்பில் 
கமகமக்கும் குழம்பிலே!
அரைத்துப் பூசும் கைகளில் 
அழகு சேர்க்கும் மருதாணி

தட்டுப் போன்ற வடிவுள்ள 
தாமரையின் இலையிலே 
சொட்டு நீரும் தங்கிடா
தழுவி நழுவிக் கொஞ்சுமே!

உதிரும் இலைகள் மரத்திலே 
புதியதாகத் துளிர்த்தல்போல் 
எதுவும் மாறும் என்பதை 
இயற்கை நமக்குக் கூறுது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

'இந்தியா' கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்: டிகே சிவகுமார்

SCROLL FOR NEXT