அழுக்காறாமை
அழுக்காறு என ஒருபாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.
அறத்துப்பால் - அதிகாரம் 17 - பாடல் 8
அழுக்காறு என ஒருபாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
- திருக்குறள்
அழுக்காறு என்னும் பாவியை
ஒருவன் நெஞ்சில் வைத்திருந்தால்
இழுக்கான தீய செயல்களில்
ஈடுபட்டுச் சீரழிவான்
Advertisement
இருக்கின்ற செல்வம் எல்லாமே
இழந்து போகச் செய்திடும்
தீய செயல் செய்ய வைத்துத்
தீராப் பழி தந்துவிடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்