சிறுவர்மணி

காற்றைத் தரும் கரங்கள் !

எஸ். ஆர். ஜி. சுந்தரம்

கூரை கீழே தொங்கி நாளும்
    சுழலும் விசிறியே!
கோடை காலக் கொடையாம் உனக்கும்
    கவிதை பாடுவேன்!

மூன்று கரத்தால் மேலே இருந்து
    காற்றைத் தருகிறாய்!
தோன்றும் வியர்வை தூரத் தள்ளி
    சோர்வை விரட்டுறாய்!

பின்னே குவியும் காற்றை அள்ளி
    முன்னே இறைக்கிறாய்!
முன்னே இருப்போர் மேனி குளிர
    மகிழ்ந்து சுழல்கிறாய்!

கோடைக் காலக் கொடிய வெப்பம்
    குறையச் செய்கிறாய்!
ஆடை அசைத்து முடியைக் கலைத்து
    ஆட்டம் காட்டுறாய்!

தரைக்கு மேலே "தட்டா மாலை'
    நாங்கள் சுழல்கிறோம்!
தலைக்கு மேலே நீயும் சுழன்று
    நடனம் புரிகிறாய்!

உன்னில் மறைந்து ஓட வைக்கும்
    மின்சக் தியுமே!
என்னுள் மறைந்து ஆட வைக்கும்
    உன்னத சக்தியே !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT