நடுவுநிலைமை
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்கோடாமை சான்றோர்க்கு அணி
அறத்துப்பால் - அதிகாரம் 12 - பாடல் 8
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க்கு அணி
- திருக்குறள்
சமமான மனநிலை
அனைவருக்கும் தேவையே
நியாயமான எண்ணங்களை
நிலைநிறுத்த வேண்டுமே
Advertisement
எடையைக் காட்டும் தராசுபோல்
சரியாக வாழ வேண்டுமே
சாய்ந்து வாழக்கூடாது
சான்றோர் தன்மை அதுதானே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்