அங்கிள் ஆன்டெனா: செழிப்பான பசுமை மிக்க பகுதிகளில்தான் பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்ன?
செழிப்பான பசுமை மிக்க பகுதிகளில்தான் பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்ன?
கேள்வி: செழிப்பான பசுமை மிக்க பகுதிகளில்தான் பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்ன?
பதில்: இதில் சந்தேகமே வேண்டாம். பூச்சிகளின் ஆட்சி செழிப்பான பசுமை மிக்க பகுதிகளிலும் வறண்ட பாலைவனங்களிலும் கொடிகட்டிப் பறக்கத்தான் செய்கிறது.
ஆனால் பகல் பொழுதுகளில் பாலைவனத்தில் பூச்சிகள் ஆஜராவதில்லை.
Advertisement
இரவு நேரங்களில்தான் வெளியே வருவார்கள். அதிலும் கோடிக்கணக்கில் வருவார்கள்.
வெப்பம் மிகுந்த பகல் பொழுதை மணலுக்கடியில் ஆழமாகப் புகுந்து கொண்டு கழித்து விடுகின்றன.
மணலுக்கடியிலும்கூட காய்ந்த இலைகளைக் குடை போல பயன்படுத்தி வெப்பத்திலிருந்து தப்பிக்கின்றன. பாலை வனப் பூச்சிகள் மிகவும் புத்திசாலிகள்.
பசுமைமிக்க பகுதிகளில் பூச்சிகள் அதிகம் காணப் படுவதற்கு, நல்ல சீதோஷ்ண நிலை, நல்ல சாப்பாடு ஆகியவைதான் முக்கிய காரணம்.