நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஏன்?
நிச்சயிக்கும் முன்பு அந்த வரனைக் குறித்த குடும்ப பின்னணி, படிப்பு என அனைத்து பின்புலங்களையும் பெரியவர்கள் விசாரித்துவிடுவார்கள். அதன் பின்புதான் நிச்சயிப்பார்கள்.
காதல் திருமணங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணத்தினால் என்ன பயன் என்று பட்டியிலிட்டிருக்கிறோம்.
• வயது வித்தியாசம் சரியான முறையில் இருக்கும். காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் வயது வித்தியாசத்தைப் பார்ப்பதில்லை.
• பெண்ணும், பையனும் தங்கள் எதிர்பார்ப்புகள் என்னவென்று பெற்றோரிடம் கூறி அதற்கேற்றபடி துணையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
• பொருளாதார நிலை,குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் துணையைத் தேர்ந்தெடுக்கலாம்.
• நிச்சயிக்கும் முன்பு அந்த வரனைக் குறித்த குடும்ப பின்னணி, படிப்பு என அனைத்து பின்புலங்களையும் பெரியவர்கள் விசாரித்துவிடுவார்கள். அதன் பின்புதான் நிச்சயிப்பார்கள்.
• திருமணத்திற்கு பின்பு இருவருக்குள்ளும் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தைரியமாக பெரியவர்களை அணுகி அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
• பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் அச்சாரம் பொறுப்புதான். பொறுப்புகள் அதிகரிக்க அதிகரிக்க இருவருக்குமான உறவு வலுப்படும்.