மாம்பழத்தின் மகிமை
பழக் கடைகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசி பார்ப்பது மாம்பழத்தைத் தான்.
பழக் கடைகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசி பார்ப்பது மாம்பழத்தைத் தான். சுவையில் மட்டுமல்லாது மருத்துவ குணங்களிலும் சிறந்து விளங்குகிறது முக்கனிகளில் முதல் கனி.
பல சத்துகளின் பெட்டகமாக உள்ள மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கும் நல்ல மருந்தாக கருதப்படுகிறது.
மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நிற்கும். நல்ல தூக்கம் வரும். நரம்பு தளர்ச்சியைப் போக்கும். மாம்பழச் சாறு பித்தம், மயக்கம், தலைவலியைத் தீர்க்கும். இப்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும். ரத்த ஓட்டம் சீராகும். கர்ப்பம் சார்ந்த கோளாறுகள் நிவர்த்தியாகும். தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையது மாம்பழம்.