முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

உணர்வுகளைக் கையாள கற்றுக் கொள்கின்றனரா குழந்தைகள்?

குழந்தைகளுக்கு உதவுவது ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய உந்து சக்தியாகும், ஆனால் இதுவே கற்பித்தலை மிகவும் சவாலானதாகவும் ஆக்குகிறது என்கிறார் வேலூர் சிருஷ்டி பள்ளிக் குழும முதல்வர் எம்.எஸ்.சரவணன்.

Updated On : 18 செப்டம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:51 PM


குழந்தைகளுக்கு உதவுவது ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய உந்து சக்தியாகும், ஆனால் இதுவே கற்பித்தலை மிகவும் சவாலானதாகவும் ஆக்குகிறது என்கிறார் வேலூர் சிருஷ்டி பள்ளிக் குழும முதல்வர் எம்.எஸ்.சரவணன்.

மாதா, பிதா, குரு, தெய்வம்- இவற்றில் பெற்றோருக்கு அடுத்தபடியாக, கடவுளுக்கு முன்னதாக நிறுத்தப்படுவது ஆசிரியர்களையே.  ஆசிரியர்- மாணவர் இடையேயான உறவு தற்போது பிரச்னைகளுக்குரியதாகி வருகிறது.

இந்த நிலையில்,  சரவணனிடம் ஓர் சந்திப்பு:

Advertisement

ஆசிரியர்- மாணவர் உறவு குறித்து உங்கள் பார்வையில்...?

எனதுஆசிரியப் பணியின் தொடக்கத்தில், "விரிவாக எழுதுவது எப்படி' என்றபாடத்தின்போது,  இரண்டாம் வகுப்பு மாணவர்களை கண்ணீர் விடச்செய்தேன். 

ஒரு எழுத்தாளராக,  நாம் மகிழ்ச்சியாகவோ, கோபமாகவோ அல்லது சோகமாகவோ இருந்த நேரத்தை நினைவுபடுத்துவது, எழுதுவதற்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்கினேன்.  பின்னர், யோசனைகளை உருவாக்கும் செயல்முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு கொடுக்க, என் பாட்டி இறந்தபோது நான் எப்படி உணர்ந்தேன் என்று கரும்பலகையில் ஒரு குறிப்பை எழுதினேன்.

தனது மாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக,  ஓர் மாணவன் கூறினான். இது வகுப்பில் உள்ள அனைவரையும்அமைதியாக்கியது.  அப்போது, சிறுமியின் குரல்,  அவளது தாத்தா புற்றுநோயால் இறந்துவிட்டார் என்று அழுதாள். "என் அத்தை இப்போது உயிருடன் இல்லை', "எனதுஉறவினரின் குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டது!" என்று வகுப்பில் ஒரே அழுகை. இதற்கு மேல் உணர்வுபூர்வமாக எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்க அவசியமில்லை என்று எனக்குத் தோன்றியது. 

நினைத்த காரியம் தானாகவே நடந்திருந்தது.  எல்லாம் சமாதானப்படுத்துவதில் அக்கறை செலுத்தினேன். வகுப்பு முடிய 10 நிமிடங்கள் இருக்கும்போது,  ஒருசிறுவன் மட்டும் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல்,  அறையின் மூலைக்கு ஓடிச் சென்று தரையில்அமர்ந்து, அழுதான்.
ஆரம்ப  வகுப்புகளுக்குப் பாடம் நடத்துவதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டிருந்தாலும்,  அன்றைய நினைவு இன்னும்  என்னுள்ஆழமாகப் பதிந்திருக்கிறது.

மனிதனின் இதயத்தைத் தொடுவதற்கும்,  மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் வைத்திருக்கும் அனைத்தையும் பயன்படுத்துவதற்கும் அவர்களுக்குக் கற்பிப்பதாகும்.

இது குழந்தைகள் விளையாடுவதில் சிரமப்படும் போது அவர்களை அமைதிப்படுத்துகிறது.

ஆசிரியர்களுக்கு கூறும் அறிவுரை என்ன?

கற்பித்தல் என்பது எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல; அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும்,  சக மனிதர்களின் மனதைத் தொடுமளவு பேசவும் பழகவும் கற்றுக் கொடுப்பதாகும்.  வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் போராட்டங்களையும்,  அதிர்ச்சிகளைச் சரியாகக் கையாள கற்றுக் கொடுப்பதாகும்.

உணர்ச்சிகளைச் சமநிலைப்படுத்த கற்றுக் கொடுக்க வேண்டும்.  மாணவர்களின் பிரச்னைகளைக் கேட்டு, சரியாக வழிகாட்ட வேண்டிய கடமையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும். 

பொறுமையாக ஒரு விஷயத்தை அணுகி,  அதற்கான சரியான தீர்வை வழங்கவேண்டும். பல்வேறு உணர்வுகளைக் கையாள வேண்டிய சூழல் உள்ளதால், அவ்வப்போது உணர்வற்ற மன நிலையில் இருக்க வேண்டிய அவசியமுண்டு.

என்னதான் வேலைவாய்ப்புக்குக் கல்வித் தகுதி மட்டும் தேவைப்பட்டாலும், ஒருஆசிரியராக,  ஒரு மாணவனை உணர்வுகளை சம நிலையில் வைத்துக் கொள்ளும் திறனைகற்றுக் கொடுக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.  சக மாணவர்களுடன் எப்படி பழகுவது,  உணவுகளை எப்படி கட்டுக்குள் வைப்பது,  மன்னிப்பதற்கு, விட்டுக் கொடுப்பதற்கும், வாழ்க்கையில் ஒவ்வொரு அடியாக எடுத்துவைப்பதற்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள்,  பெற்றோர்களைத் தவிர, பள்ளியின் அதிகாரக் கட்டமைப்பிலிருந்து வெகுதொலைவில் இருக்கும் ஆசிரியர்கள், அதிக சுமை கொண்டஅமைப்பின் "அதிர்ச்சி உறிஞ்சிகள்'.  

மாணவர்கள் தங்கள் குடும்பங்கள், பள்ளிகள் அல்லது ஒட்டுமொத்தச் சமுதாயத்தில் இருந்து தங்களுக்குத் தேவையானதைப் பெறவில்லை என்றால், ஆசிரியர்கள் நியாயமற்ற முறையில் பழியைத் தங்கள் மேல் ஏற்றுக் கொள்கிறார்கள்.  அவர்கள் அவ்வாறு செய்யாதபோது,  அவர்கள் தனிப்பட்ட, தொழில்முறை குற்றத்தை அனுபவிக்கிறார்கள். அதை அவர்கள் அதிக நன்மைக்காக கடக்க வேண்டும்.

ஒருவர் அதிகார நிலையிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறீர்களோ, அவருக்குஅவ்வளவுகுறைவானஆதரவேகிடைக்கும். 

பள்ளி அமைப்பில் உள்ள பிரச்னைகளும் அதன்தீர்வும்..?

ஆசிரியர்கள் மனித நேயத்தையும்,  மாணவர்கள் பாதிப்படையும் விஷயங்கள் குறித்தும் அவர்களுக்குப் போதிக்கவும் உதவவும் வேண்டும்.

அவர்களை இந்த அழுத்தத்திலிருந்து விடுவிக்க வழியில்லை. இதை நிவர்த்தி செய்ய சிந்திக்க வேண்டும்.

ஆசிரியர்களின் குரல்,  மரியாதைக்குரிய சூழலை உருவாக்குவதன் மூலம் "இதை சரி செய்ய தொடங்கலாம்.  ஒரு செயல்படும் அமைப்புமுறையானது உணர்ச்சிகரமானஉழைப்பை சுமையாக இல்லாமல் வெகுமதியாக மாற்றவேண்டும். 

ஆசிரியர்களின் நிபுணத்துவம் மதிக்கப்படவேண்டும்.  கல்வி அமைப்பில் சில முன்னோடி மாவட்டங்களில் இது நடைமுறையில்உள்ளது. 

இயல்பான,  பொருத்தமான அளவிலான உணர்ச்சி அழுத்தத்தை ஆசிரியர்களால் சகித்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்கானபொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படாத சூழலில் மாணவர்களுக்கு உணர்வுகள் அனைத்தையும் கையாள்வதில் உதவுவதே பள்ளி நிர்வாகத்தின் கடமையாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.