கற்ற பாடம்..!
ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்களது கட்சித் தொண்டர்களுக்குத் தருவது கூடாது.
ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்களது கட்சித் தொண்டர்களுக்குத் தருவது கூடாது. தவிர்க்க முடியாத, எதிர்பாராத நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி, ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வது கூடாது.
இதுகுறித்து "பேசும் கலை வளர்ப்போம்' எனும் நூலில் மு.கருணாநிதி எழுதியிருந்தது:
""என் தந்தை இறந்து எரியூட்டல் நிகழ்ச்சி நடைபெற்ற அன்று மாலை, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாஞ்சியம் எனும் ஊரில் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கூட்டத்துக்குத் தவறாமல் சென்று வந்தேன்.
Advertisement
Advertisement
முதல் மனைவி பத்மா மரணப் படுக்கையில் கடைசி மூச்சு இழையோடக் கண் மூடிக் கிடந்தபோது, முன்பே ஒப்புக் கொண்டிருந்த புதுக்கோட்டை கூட்டத்துக்குச் சென்று பேசினேன். அன்று இரவோடு இரவாக ஒரு லாரியில் ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தேன். அவள் என்னைப் பிரிந்து நீங்காதத் துயில் கொண்டு விட்டாள் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்தேன்.
இப்படி பல நிகழ்ச்சிகள் பொது வாழ்க்கையில்...'' என்று கூறியிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.