ஞாயிறு கொண்டாட்டம்

பூங்கா நகரம் 

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நடராஜ், நா. ராசா ஆகிய இருவரும் தயாரித்து வரும் படம் "பூங்கா நகரம்'. தமன்குமார், ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

DIN

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நடராஜ், நா. ராசா ஆகிய இருவரும் தயாரித்து வரும் படம் "பூங்கா நகரம்'. தமன்குமார், ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். 

அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒரு காதல் ஜோடி, இன்னொரு காதல் ஜோடிக்கு உதவி செய்யும் நிலை... 

அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமே கதை. அதற்காக அந்த காதல் கடந்து வந்த தூரம், கொடுத்த  விலை என கதை போகும். அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT