முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போரா...?

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியமான தகவல்களை அறிய வேண்டியது அவசியம்.

Updated On : 28 ஜூலை, 2024 at 11:51 AM
தேசிய நெடுஞ்சாலை
பகிர்:

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியமான தகவல்களை அறிய வேண்டியது அவசியம். சுங்கச்சாவடியில் கிடைக்கும் ரசீதில் என்னென்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

சுங்கச் சாவடியில் பயணிக்கும்போது உங்கள் கார் திடீரென நின்றால், உங்கள் காரை இழுத்துச் செல்வதற்கும், சுமந்து செல்வதற்கும் சுங்கச்சாவடி நிறுவனமே பொறுப்பாகும்.

அதிவிரைவு நெடுஞ்சாலையில் உங்கள் காரில் பெட்ரோல் அல்லது பேட்டரி தீர்ந்துவிட்டால், உங்கள் காரை மாற்றுவதற்கும் பெட்ரோல், வெளிப்புற சார்ஜிங்கை வழங்குவதற்கும் கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் பொறுப்பாகும். நீங்கள் 1033-க்கு அழைக்கவும். பத்து நிமிடங்களில் உதவி செய்து 10 லிட்டர் பெட்ரோல் வரை இலவசம். கார் பஞ்சர் ஆனாலும், உதவிக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கார் விபத்துக்குள்ளானாலும் நீங்கள் அல்லது உங்களுடன் வரும் யாரேனும் முதலில் ரசீதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

 காரில் பயணம் செய்யும்போது ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். அத்தகைய நேரத்தில் ஆம்புலன்ஸை உங்களுக்கு வழங்குவது சுங்கச்சாவடி நிறுவனங்களின் பொறுப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →