ஜி .அர்ஜுனன்
ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, கல்கியிடம் (இரா.கிருஷ்ணமூர்த்தி), 'நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்' என்றார்.
'சொல்லுங்கள்... செய்ய காத்திருக்கிறேன்' என்றார் கல்கி.
'தாங்கள் என் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து கொண்டு தேச சேவை செய்ய வேண்டும்' என்றார் ராமசாமி ரெட்டியார்.
இதற்கு கல்கியோ, உங்கள் அமைச்சர் பதவி ஐந்து ஆண்டுகள்தான். நான் இந்த இதழாசிரியர் பதவியை விட்டு அமைச்சரவையில் சேர்ந்தால், ஆசிரியரை விட அமைச்சர் உயர்ந்தவர் என்றல்லவா ஆகிவிடும். அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்று கூறி அமைச்சர் பதவியை மறுத்தார் கல்கி .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.