அமைச்சர் பதவியை மறுத்த கல்கி
ஜி .அர்ஜுனன் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, கல்கியிடம், 'நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்' என்றார்.
ஜி .அர்ஜுனன்
ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, கல்கியிடம் (இரா.கிருஷ்ணமூர்த்தி), 'நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்' என்றார்.
'சொல்லுங்கள்... செய்ய காத்திருக்கிறேன்' என்றார் கல்கி.
Advertisement
Advertisement
'தாங்கள் என் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து கொண்டு தேச சேவை செய்ய வேண்டும்' என்றார் ராமசாமி ரெட்டியார்.
இதற்கு கல்கியோ, உங்கள் அமைச்சர் பதவி ஐந்து ஆண்டுகள்தான். நான் இந்த இதழாசிரியர் பதவியை விட்டு அமைச்சரவையில் சேர்ந்தால், ஆசிரியரை விட அமைச்சர் உயர்ந்தவர் என்றல்லவா ஆகிவிடும். அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்று கூறி அமைச்சர் பதவியை மறுத்தார் கல்கி .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.