இணையத்தில் இலவசம்!
ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில், இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், குறளை மையமாக வைத்து உருவான படம் 'திருக்குறள்'.
முன்னாள் முதல்வர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரிலும், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை 'வெல்கம் பேக் காந்தி' என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில், இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், குறளை மையமாக வைத்து உருவான படம் 'திருக்குறள்'.
இப்படம் திரையரங்குகளில் வெளியானது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகம் முழுக்க உள்ள மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், இப்படம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தை உலகம் முழுவதும் உள்ளவர்கள் இணையத்தில் இலவசமாகக் காணும் விதத்தில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் பேசும் போது, 'பெரும் முயற்சிக்குப் பின் இந்தப் படத்தை உருவாக்கி வெளியிட்டோம். வரவேற்பு இருந்த அளவுக்குத் திரையரங்குக்குச் சரியான அளவில் ரசிகர்கள் வரவில்லை.
Advertisement
Advertisement
பெரும் பொருள் செலவில் உருவான இப்படத்தை மக்கள் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். அதனால் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று, யூ டியூப் தளத்தில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்தோம்.
ராம்ராஜ் குழுமத் தலைவர் நாகராஜ் விளம்பரம் தந்து, 'வெறும் கார்ட் மட்டும் போடுங்கள்' என்று பெருந்தன்மையோடு சொன்னார். அவருக்கு நன்றி!' என்றார் இயக்குநர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.