முகப்பு
தமிழ்மணி

பாரதியை வென்ற மாதவையா!

விஞராக மாதவையா, பாரதியாருடனும் போட்டி போட்டு வென்றார் ஒரு காலத்தில்! அதிலும் தேச பக்திக் கவிதை என்ற துறையிலே பாரதியார் முதுகுக்கு மண் காட்டிவிட்டார் என்றால், அது இன்று யார் நம்ப முடியும்?

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

விஞராக மாதவையா, பாரதியாருடனும் போட்டி போட்டு வென்றார் ஒரு காலத்தில்! அதிலும் தேச பக்திக் கவிதை என்ற துறையிலே பாரதியார் முதுகுக்கு மண் காட்டிவிட்டார் என்றால், அது இன்று யார் நம்ப முடியும்?

தூத்துக்குடி என்ற தேச பக்தியின் வளர்ப்புப் பண்ணையில் வழக்குரைஞர் ஒருவர் சிறந்த தேசபக்தி கவிதைக்குப் பரிசளிப்பதாக ஒரு திட்டம் வகுத்திருந்தார். அதற்குப் பாரதியாரும் பாடல் அனுப்பி இருந்தார்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்பது போன்ற பாடல்கள் அன்று பெறமுடியாத பரிசை அ.மாதவையா இயற்றிய "பொது தர்ம ஸங்கீத மஞ்சரி' அடித்துக்கொண்டு போய்விட்டது.

தேசபக்திக் கவிதைத் துறையில் பாரதியாரை மாதவையா வெற்றி கொண்டது காலத்தின் கோலம்தான் - விதியின் விசித்திர கதியும்தான்! இன்று "கவி மாதவையா' என்ற பெயரையே தமிழ்நாடு மறந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.