பழமொழி நானூறு
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில். (பாடல்-55)
மிகுதியும் கற்க வேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார். அவ்வறிவு படைத்தவர்களது புகழ் நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுகளில்லை. அந்த நாடுகள் அயல் நாடுகளாகா, அவ்வறிவுடையோர் நாடுகளேயாம். அங்ஙனமானால், வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டுசெல்ல வேண்டியதில்லை. (க-து.) கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. "ஆற்றுணா வேண்டுவ தில்' என்பது பழமொழி.