தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார்
மற்றொன் றறிவாரின் மாணமிக நல்லரால்
பொற்ப உரைப்பான் புகவேண்டா கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல். (பாடல்-50)


கற்றது ஒன்றில்லையாயினும், நற்குடிப்பிறந்தார் ஒன்றை மட்டும் அறிந்தாரைவிட நற்குணங்களில் மாட்சிமைப்பட மிகச் சிறந்தோர்களே யாவார்கள். கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை அழகுபட விரித்துரைக்கப் புகவேண்டுவதில்லை. கருமாருடைய சேரியில் தையல் ஊசியை விற்கப் புகுவார்இல்லையாதலால். (க-து.) உயர்குடிப் பிறப்பின்றிக் கல்வி ஒன்றே உடையாரைவிட உயர்குடிப்பிறந்தார் சாலச் சிறந்தவர்களே யாவார்கள். "கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT