தமிழ்மணி

முழுவல்!

இராம. வேதநாயகம்

தமிழில் "முழுவல்' என்ற சொல்லாளுமை வியக்கத்தக்க வகையில் பயன்பாட்டில் இருந்து வந்ததுடன்,  பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் பயின்று வந்துள்ளது.

"முழுவல்' என்றால் ஒருவகை நீர்ப்பறவை என்றும், முழுமையான அன்பு மற்றும் விடாது தொடரும் அன்பு என்றும்  பொருள்படுகிறது. இறைவன்  நம் மீது கொண்ட அன்பையும் முழுவல் எனலாம். முழுவல் என்பது உழுவல், அன்பு என்ற பொருளிலும் வரும். 

ஆங்கிலத்தில் "அன்பு' என்ற பொருளில், ஈங்ங்ல் கர்ஸ்ங் என்றும், "நீர்ப்பறவை வகை' என்ற பொருளில் 

An aqatic bird என்றும், "விடாது தொடரும் அன்பு' என்ற பொருளில், Relenlessly pursuing love என்றும் வழங்கப்படும்.

குளக்கரையில் உள்ள ஒருவகை நீர்ப்பறவையை எடுத்துக் காட்டுகின்றார் மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார்.

"திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்
எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்
அன்னச் சேவல் அரச னாக
பன்னிறப் புள்ளினம் பரந்தொருங் கீண்டி...'  (மணி.8.28-31)

"விடாது தொடரும் அன்பு' என்ற பொருளில் தணிகை புராணம், ""முழுவல் கடல் பெருத்தான்'' (நந்தி.6) என்றோதுகிறது. "அன்பு' என்ற பொருளில், விநாயக புராணம் ""பழுத்த முழுவல் அமரர்...'' (விநா.புரா.72:54) என்று சுட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT