தமிழ்மணி

 உறவினரைச் சேர்ந்தொழுகுக! 

பழமொழி நானூறு
 
 மெய்யா உணரிற் பிறர்பிறர்க்குச் செய்வதென்?
 மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்
 செய்யா ரெனினும் தமர்செய்வர் பெய்யுமாம்
 பெய்யா தெனினும் மழை. (பாடல்-109)
 கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையாய்! உண்மையாக ஆராயின், உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது? ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும், உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள், குறித்த ஒரு பருவ காலத்தில் பெய்யாதொழியினும் பின்னையும் பெய்வது மழையேயாதலான். "பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT