தமிழ்மணி

 தீயவரை நண்பராகக் கொள்ள வேண்டாம் 

முத்துமணி/கார்த்திகேயன்

பழமொழி நானூறு
 தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
 இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
 யாவரே யாயினும் நன்கொழுகார் கைக்குமே
 தேவரே தின்னினும் வேம்பு. (பாடல்-114)
 தெளிவாக நட்பு பூண்ட ஒருவரை, ஒருவர் பொல்லாங்குரைக்கும் உரையைக் கேட்டால், நம்மையும் இப்பெற்றியே உரைப்பார் என்று கருதி, அவரை நம்பாதொழிக. உண்பவர்கள் தேவர்களேயானாலும் வேம்பு கசக்கும் தன்மையது. (அதுபோல), நட்புப் பூண்பவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களோடு நன்றாக ஒழுகுதல் இலர். "கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு' என்பது பழமொழி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT