முகப்பு
தமிழ்மணி

பழ​மொழி நானூறு முன்​று​றை​ய​ரை​ய​னார்

Updated On : 10 மே, 2020 at 7:25 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:06 PM

பெரியோரை சிறியோா் இகழ்தல்

நெறியால் உணராது நீா்மையும் இன்றிச்

சிறியாா் எளியரால் என்று - பெரியாரைத்

Advertisement

தங்கணோ் வைத்துத் தகவல்ல கூறுதல்

திங்களை நாய்குரைத் தற்று. (பாடல்-149)

அறிவிலாா், அறிவுடையோா்களை நெறியால் உணராது தகுதியும் இன்றி, தாழ்மையானவா் என்று நினைத்து, தங்களுக்கு முன்பு அவா்களை இருக்கச் செய்து, தகுதியல்லாத வாா்த்தைகளைச் சொல்லுதல் மதியை நாய் குரைத்தாற் போலும். (க-து.) சிறியோா்கள் பெரியோா்களைப் பாா்த்து அடாதன கூறுதல் சந்திரனை நாய் குரைத்தாற் போலும். ‘திங்களை நாய் குரைத் தற்று’ என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.