தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அளவுகடந்த தீய செயல்களையே வெகுண்டு பல நாள்கள் செய்துவந்த போதும், கீழ்மக்களிடத்திலே அவற்றைப் பற்றிய ஒருவிதமான பழியும் தோன்றுவதில்லை.

தினமணி


கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள் செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும்} தோன்றாதாம்
ஒன்றாய் விடினும்  உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு. (பாடல்}204)


அளவுகடந்த தீய செயல்களையே வெகுண்டு பல நாள்கள் செய்துவந்த போதும், கீழ்மக்களிடத்திலே அவற்றைப் பற்றிய ஒருவிதமான பழியும் தோன்றுவதில்லை. "அது அவர் இயல்பு' எனச் சான்றோர் ஒதுக்கிவிடுவர். ஆனால், உயர்ந்த நிலையிலே உள்ளவர்களிடத்தே தோன்றிய குற்றமானது ஒன்றாகவே இருந்தாலும்கூட, அது குன்றின் மேலே இட்டுவைத்த விளக்கைப்போல நெடுந்தொலைவுக்கும் தெரிந்து பழிக்கப்படுவதாக ஆகிவிடும். "குன்றின்மேல் இட்ட விளக்கு' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT