முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்றனவும், தம்முள் மாறுபட்டனவுமான இரண்டு காளை மாடுகள் ஒரு துறையுள் நின்று நீர் குடிக்குமோ? குடிக்காது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
பகிர்:

உற்றால் இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான் 
மற்றவற்கு ஒன்னோரோடு ஒன்றுமோ! தெற்ற 
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா 
இரண்டேறு ஒருதுறையுள் நீர். (பாடல்239)

தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்றனவும், தம்முள் மாறுபட்டனவுமான இரண்டு காளை மாடுகள் ஒரு துறையுள் நின்று நீர் குடிக்குமோ? குடிக்காது. அதுபோலவே, தன் அரசனுக்கு ஒரு துன்பம் வந்துற்றால் தன் உடம்பையும் கொடுக்கக்கூடிய ராஜபக்தி உடையவன் அரசனுக்குப் பகையானவர்களோடு சேர்பவனாவானோ? சேரமாட்டான். "உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர்' என்பது பழமொழி.

முழு கட்டுரையைப் படிக்க →