தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையும்
எம்தீமை என்றே உணர்வதாம்-அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
ஒருவர் பொபைஇருவர் நட்பு. (பாடல்-247)

கரையோடு பொருதலான அலைகள் வந்து உலவுகின்ற பொங்கும் நீர்வளத்தினை உடைய சேர்ப்பனே! ஒருவர் பொறுக்கும் பொறுமையானது இருவரின் நட்புக்கும் உதவியாகும். நட்பு செய்தவர்களுக்குத் தம்மால் செய்யப்பட்டதொரு தீமை எதுவும் இல்லாதவர்கள், தமக்கு நண்பர்கள் செய்யும் தீமையையும், "எம் தீவினைப் பயனால் வந்ததே இது' என்று நினைத்து அதனைப் பாராட்டாது பொறுத்துக் கொள்ளவே செய்வர்.  "ஒருவர் பொறைஇருவர் நட்பு' என்பது பழமொழி.

(திருத்தம்: சென்ற வாரம்  பாடல் எண். 126 எனத் தவறுதலாக வெளியாகிவிட்டது. அப்பாடல் எண் 246 என்பதே சரியானது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT