அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, கல்வி
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்
மிளகு உளு உண்பான் புகல். (பாடல்: 326)
அறிவு குறைந்திருப்போர் கூடியிருக்கும் அவையில் பங்கேற்றுச் சலசலப்பை ஏற்படுத்தி வாழும் கல்லாத ஒருவர் நல்லோர் அவையிலே நுழைந்து, நாவடக்கமும் கற்ற அறிவும் மிகுதி உடையார்தம் அறிவை இகழ்ந்து பேசுவது புழுவால் அரிக்கப் பெற்று உளுத்துப்போன காரம் இல்லாத மிளகை உண்பது போன்றதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.