சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி,
துறந்தார் தொடர்ப்பாடு கோடல், கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட! அஃது அன்றோ,
யானை போய், வால் போகாவாறு. (பாடல்: 342)
ஒலிக்கும் அருவி விழுந்து தினைப்புனத்தில் நீர்பாய்ச்சும் தலைவனே! நீ பெற்றெடுத்து வளர்த்த நல்ல பிள்ளைகளையும், உறவையும் சேமித்த செல்வங்களையும் துறந்து வெளியே வந்துவிட்டாய். எனினும், இன்னும் ஓரிரு தொடர்புகளை வைத்துப் பற்றைக் கொண்டுள்ளாய். கோட்டை வாயிலில் உள்நுழைந்த யானையின் முழு உடம்பு உள்நுழைந்தபின் வால் மட்டும் போகவில்லை என்பது போன்று உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.