தமிழ்மணி

நல்வினைகளை தேடுவோம்!

ஆயுள் முடிந்துபோன ஆட்களைத் தேடிக்கொண்டே திரிகின்ற இயல்பினையுடையது அருள் அற்ற கூற்று.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்பார்த்து உழலும் அருளில்கூற்று உண்மையால்

தோட்கோப்புக் காலத்தாற் கொண்டு உய்மின்; பீட்பிதுக்கிப்

பிள்ளையைத் தாயலறக் கோடலான், மற்றதன்

கள்ளங் கடைப்பிடித்தல் நன்று.

(பாடல் 20 அதிகாரம்: இளமை நிலையாமை)

ஆயுள் முடிந்துபோன ஆட்களைத் தேடிக்கொண்டே திரிகின்ற இயல்பினையுடையது அருள் அற்ற கூற்று. அது உண்மையாதலால், நல்வினையாகிய கட்டுச்சோற்று மூட்டையைத் தேடிக்கொள்ளும் காலத்தோடேயே தேடி வைத்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளுங்கள்.

கருப் பையிலே இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாயானவள் அலறித்துடிக்கப் பிள்ளையைக் கொண்டு போகின்றதனால், அந்தக் கூற்றத்தின் வஞ்சனையை மறவாமல், உறுதியாக அறிந்து தெளிவுகொள்ளுதலே மிகவும் நன்மையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT