முகப்பு
தமிழ்மணி

துறவொழுக்கத்தை கைவிடேன்

அனைவரும் காணும்படியாக, ஊருக்குப் புறத்தேயுள்ள சுடுகாட்டிலே உதிர்ந்து சிதறிக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்து, உடலின் நிலையாமையாகிய உண்மை நிலையை அறிந்து, துறவறத்திலே ஒழுகிவருபவன் யான்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 5:47 PM
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 5:46 PM

'முல்லை முகை, முறுவல், முத்து' என்று, இவைபிதற்றும்

கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ,

எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க

Advertisement

பல்லென்பு கண்டொழுகு வேன்?

(பாடல் 45 அதிகாரம்: தூய்து அன்மை)

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 5:46 PM

அனைவரும் காணும்படியாக, ஊருக்குப் புறத்தேயுள்ள சுடுகாட்டிலே உதிர்ந்து சிதறிக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்து, உடலின் நிலையாமையாகிய உண்மை நிலையை அறிந்து, துறவறத்திலே ஒழுகிவருபவன் யான்.

அப் பற்களின் தோற்றத்தை, 'முல்லை அரும்புகள்' என்றும், 'இளநகை' என்றும் 'முத்தெ'ன்றும், இன்னபடியெல்லாம் பிதற்றுகின்ற, நல்லற நூற்களைக் கல்லாத அற்ப மனிதர்களின் பேச்சுக்கள் என்னைக் கவலைப்படுத்துமாறு, யான் என் துறவு ஒழுக்கத்தைக் கைவிட்டு விடுவேனோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.