திருச்செந்தூரில் குரு!
திருச்செந்தூரில் முருகன் ஞான குருவாக அருள்கிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குரு பகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில்
திருச்செந்தூரில் முருகன் ஞான குருவாக அருள்கிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குரு பகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில்
கூறினார்.
எனவே இத்தலம், குரு தலமாகவும் கருதப்படுகிறது. பிராகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்டநாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல் ஆல மரத்தில் 4 வேதங்களும் கிளிகள் வடிவில் இருக்கின்றன. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருள்வதால் இவரை ஞான ஸ்கந்தமூர்த்தி என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சி அன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும் என்பது ஐதீகம்.