முகப்பு
வெள்ளிமணி

ஆலய அதிசயங்கள்

புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் உள்ளது பேரையூர். இங்கு நாகநாதர் கோயிலுக்குள் சிறிய சுனை உள்ளது.

Updated On : 6 மார்ச், 2014 at 4:20 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:05 AM

• புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் உள்ளது பேரையூர். இங்கு நாகநாதர் கோயிலுக்குள் சிறிய சுனை உள்ளது. மகப்பேறு இல்லாதவர்கள், நாகம் சிலை வடித்து வைப்பதாக வேண்டினால் பலன் கிடைக்கிறதாம். "மகப்பேறு வழங்கும் நாகநாதர்' என்று மூலவரை அழைக்கிறார்கள்.

• சென்னை - திருப்பதி போகும் வழியில் ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தில் வேதநாராயணப் பெருமாள் தலையில் இருந்து இடுப்பு வரை மனித உருவமும், கீழே மீன் வடிவமும் கொண்டு காட்சியளிக்கிறார்.

• சிவாலயங்களில் துர்க்கை வடக்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். திருவாரூர் ஆந்தக்குடி சோமேஸ்வரர் ஆலயத்திலுள்ள துர்க்கை அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.

Advertisement

• நவகிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில், நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அபூர்வத்தை திருவாரூர், தியாகராஜர் ஆலயத்தில் காணலாம்.

• புதுக்கோட்டை மாவட்டத்தில் அருள்புரியும் தேனுகந்தநாதருக்கு தினமும் தேனடையிலிருந்து தேன் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறெங்கும் இதுபோன்று நடைபெறுவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.