வெள்ளிமணி

யோசேப்புவை உயர்த்திய தேவன்!

DIN

தெய்வ பக்தியுள்ளவர்கள் அப்பாவியாக தம் வாழ்வில் பிறர்க்கு நன்மை செய்து நலம் பயப்பர்.
 வேதாகமத்தில் யோசேப்பு என்பவர் வரலாறு உண்டு. யாக்கோபு என்னும் தெய்வபக்தியுள்ள மனிதரின் இரண்டாவது மனைவியின் முதல் மகன். மிக அழகிய ரூபம் உள்ள மகனை யாக்கோபு மிகவும் நேசித்தார். யோசேப்பு தான் கண்ட கனவை தன்அண்ணன்களிடம் சொல்லுவார். அவர் கனவில் சூரியனும் நிலாவும் பதினொரு நட்சத்திரங்களும் தன்னை வணங்கியது என்றார் (ஆதியாகமம் 37: 9) அறுவடை செய்து அரிகட்டுகள் கட்டி கொண்டிருந்தோம். அப்போது என் அரிகட்டு நிமிர்ந்து நின்றது . உங்கள் அரிகட்டுகள் என் பக்கமாய் சாய்ந்து வணங்கி நின்றது என்றார்.
 யோசேப்புவின் அண்ணன்கள் அவன் மீது மிகவும் கோபம் கொண்டிருந்தனர். யோசேப்பு அவன் தம்பியும் தம் தந்தையுடன் வீட்டில் இருக்கும்போது அவர்களது அண்ணன்கள் ஆடு மேய்த்துக்கொண்டே பல மாதம் செல்வர். யாக்கோபு தன் அண்ணன்களை சென்று பார்த்துவர, உணவுப்பொருள்களையும் கொண்டுபோய் கொடுக்கச் சொன்னார். தூரத்தில் வரும் போதே யோசேப்பை கண்ட அவன் அண்ணன்கள் அவனைக் கொன்று விட நினைத்தனர். அவன் அணிந்திருந்து பலவண்ண அங்கியை கழட்டிக்கொண்டு, ஒரு பாழுங்கிணற்றில் போட்டனர்.
 தூர தெரியும் எகிப்து வியாபாரிகளிடம் யோசேப்பை கிணற்றிலிருந்து எடுத்து இருபது வெள்ளிகாசுக்கு விற்று விட்டனர். இவ்வாறு எகிப்து தேசத்தில் வணிகன் போத்திபார் மனைவியின் காம இச்சைக்கு விலகினதால், அப்பாவியான யோசேப்பு சிறைக்கு கொண்டு போகப் பட்டார். தன்னுடன் சிறையிலிருந்த இருவரின் கனவுக்குப் பொருள் சொல்லி, அவர்களில் அரசருக்குமான பானபாத்திரக்காரன், எகிப்து அரசரின் கனவு கண்டு அர்த்தம் விளங்காமல் தவித்தான். சிறையிலிருந்த யோசேப்பு எகிப்து அரசரின் கனவில் நையில் நதியிலிருந்து கரையேறின எழு பசுக்கள் கொழுகொழுவானவை . ஏழு ஆண்டு செழுமையையும் பின்னர், கறையேறின எலும்பும் தோளுமான ஏழு பசுகள் பஞ்ச காலம் வரும் என்றும் விளக்கி, செழுமை காலத்தை பஞ்ச காலமாக்கும் என்று பொருள் சொல்லி யோசேப்பு எகிப்து அரசரின் பிரதிநிதியாகி செழுமை கால கோதுமையை களஞ்சியத்தில் சேர்த்து பஞ்ச காலத்தில் களஞ்சிய தானியத்தை அரசே மக்களுக்கு விற்று அரசனை மிகப் பெரிய செல்வந்தராக ஆக்கியது.
 இவ்வாறு யோசேப்பு தனக்கு வந்த துன்பத்தை பொறுத்து தேவன் காட்டிய வழியில் நேர்மையாகச் சென்று எகிப்து மக்களை மட்டும் அல்ல, தன் அப்பா, அண்ணன்கள், தம்பியின் குடும்பத்தின் மக்களையும் காப்பாற்றிய வரலாறு வேதாகமத்தில் உள்ளது.
 தேவகுமாரனாகிய இயேசுவும் இப்பூமியில் நம்மை மீட்க மனித குமாரனாக வந்தார். நம்மை மீட்க இப்பூவுலகில் வாழ்ந்து ஓர் அப்பாவி போல் மனிதரிடம் இருந்தார். தமக்கு கொடுத்த கொடுமை, துன்பத்தைப் பொறுத்துக்கொண்டார். நமது பாவம், சாபம் தண்டனை நீங்கி நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி சிலுவை சுமந்து கால்களிலும் கைகளிலும் நெஞ்சிலும் காயம்பட்டு பரிசுத்த ரத்தத்தை சிந்தி பாவ மீட்பு பரிகாரியாக ஆனார். இந்த உபவாச காலத்திலும் இயேசு ஆண்டவரின் பாடுகளில் பங்கு கொண்டு உபவாசிப்போம்.
 - தே. பால் பிரேம்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT