முகப்பு
வெள்ளிமணி

பலன் தரும் பரி​கா​ரத் தலங்​கள்

திரு​மீ​யச்​சூர் ஸ்ரீல​லி​தாம்​பிகை கோயி​லில் "லலிதா சஹஸ்​ர​நா​மம்' இயற்​றப்​பட்​டது என்​பது வர​லாறு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

திரு​மீ​யச்​சூர் ஸ்ரீல​லி​தாம்​பிகை கோயி​லில் "லலிதா சஹஸ்​ர​நா​மம்' இயற்​றப்​பட்​டது என்​பது வர​லாறு. இங்கு நவ​கி​ர​கங்​கள் எல்​லாம் சர்ப்ப வடி​வி​லேயே இருப்​பது ஓர் அபூர்​வக் காட்சி. சக்​தி​வாய்ந்த இந்த அம்​பி​கையை தரி​சித்​தால் தடை​கள் இன்றி காரி​யம் நிறை​வே​றும் என்​பது நம்​பிக்கை.

கோவை மாவட்​டம் சிறு​முகை அருகே இடுக்​கம்​பா​ளை​யத்​தில் உள்ள ஜெய​மங்​கள ஆஞ்​ச​நே​யர் கோயில் கிருஷ்​ண​தே​வ​ரா​யர் காலத்​தில் கட்டப்​பட்​டது என்​பது வர​லாறு. நவ​கி​ரக தோஷ நிவர்த்​தித் தல​மா​க​வும் இக்​கோ​யில் விளங்​கு​கி​றது. இந்த ஆஞ்​ச​நே​யரை வழி​பட்​டால் வியா​பா​ரத்​தில் வெற்றி கிடைக்​கும் என்​பது நம்​பிக்கை.

ஈரோடு அரு​கில் உள்​ளது பூந்​துறை. இங்​குள்ள கோயி​லில் முரு​கப் பெரு​மான் ஆறு​மு​கங்​க​ளு​டன் வள்ளி தெய்​வானை சமே​த​ரா​கக் காட்சி அளிக்​கி​றார். இக்​கோ​யி​லில் வழி​பாடு செய்​தால் திரு​ம​ணத் தடை நீங்​கும், பிள்​ளைப்​பேறு பாக்​கி​யம் கிடைக்​கும் என்று நம்​பு​கின்​ற​னர். 

நாகப்பட்டினம் - நன்னிலம் அருகே உள்​ளது திருக்கண்ணபுரம் சௌரி ராஜ பெருமாள் கோயில். இங்கு எழுந்தருளியுள்ள நீல​மே​கப்​பெ​ரு​மாள் பக்​தர்​க​ளின் குறை​களை எல்​லாம் தம்​மி​டம் எடுத்​துக் கொள்​ளும் வித​மாக இரண்டு கைக​ளை​யும் பக்​தர்​களை நோக்கி விரித்​த​படி காட்சி​ய​ளிக்​கி​றார். இக்​கோ​யி​லில் வழி​பட்​டால் வர​வேண்​டிய சொத்​து​கள் வந்து சேரும் என்​பது ஐதீ​கம்.

திரு​வி​டை​ம​ரு​தூ​ரில் மகா​லிங்​கேஸ்​வ​ரர் கோயில் உள்​ளது. தீய சக்​தி​க​ளால் பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு இங்​குள்ள இறை​வன் கண்​கண்ட தெய்​வ​மாக விளங்​கு​கி​றார் என்​பது கோயில் புரா​ணம். மன​ந​லம் குன்​றி​ய​வர்​களை இங்கு அழைத்து வந்​தால் குணம் அடை​கி​றார்​கள். அகி​லாண்ட நாயகி ஸ்ரீபி​ர​கத்  சுந்​தர குஜாம்பிகை அருள்​பா​லிக்​கும் அபூர்​வத் திருத்​த​லம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.