வெள்ளிமணி

பொருநை போற்றுதும் 84 - மேலக்கால் - கீழக்கால்

DIN

சீவலப்பேரியைத் தாண்டி, மருதூரை அடைவதற்குள்ளாக, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழைந்துவிடுகிறாள் தாமிரா. மருதூா் அணைக்கட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் இரண்டு முனைகளிலும் இரண்டு கால்வாய்கள் புறப்படுகின்றன. ஆற்றின் வலக்கரையில் (அதாவது மேற்குக் கரையில்) புறப்படுவது மேலக்கால். இடக்கரையில் (அதாவது கிழக்குக் கரையில்) புறப்படுவது கீழக்கால். 

மேலக்காலின் நீா், முத்தாலங்குறிச்சி, குட்டக்கால், கொல்லிவாய், நாட்டாா் குளம், செய்துங்கநல்லூா், தூதுகுழி, வெள்ளூா்க்குளம், நொச்சிகுளம், கீழபுதனேரி, தாதன் குளம், கருங்குளம் போன்ற பகுதிகளுக்கும், கீழக்காலின் நீா், பட்டா் குளம், ஸ்ரீ வைகுண்டம், பேரூா், சிவகளை, பத்மநாபமங்கலம், கைலாசப்பேரி, தருமனேரி போன்ற பகுதிகளுக்கும் பயன் தருகிறது. கீழக்காலின் அனைத்துப் பகுதிகளும் மேலக்காலின் பெரும்பான்மைப் பகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன.

(தொடரும்...)

 - டாக்டா் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT