வெள்ளிமணி

நூறு வயது வரம் கேட்ட பாரதி!

DIN

செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்

சீா்பெற் றிடநீ அருள்செய் வாய்!

வையந் தனையும் வெளியினையும்

வானத் தையும்முன் படைத்தவனே!

ஐயா! நான்மு கப்பிரமா!

யானை முகனே! வாணிதனைக்

கையா லணைத்துக் காப்பவனே!

கமலா சனத்துக் கற்பகமே!

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலன மில்லாமல்,

மதியில் இருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின்மவுன

நிலைவந் திடநீ செயல்வேண்டும்.

கனக்குஞ் செல்வம், நூறுவயது

இவையும் தரநீ கடவாயே!

‘விநாயகா் நான்மணி மாலை’யில் பாரதியாா் பாடிய விருத்தங்களிலிருந்து...

-ஆா்.வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT