அமெரிக்காவில் இந்தியர் மர்மச் சாவு
அமெரிக்காவில் இந்தியர் ஒருவர், அவருடைய கடையில் மர்மமான முறையில்
அமெரிக்காவில் இந்தியர் ஒருவர், அவருடைய கடையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இது குறித்து அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ள விவரம்: இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி (47). இவர் அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் மதுபான கடை ஒன்றை நடத்தி வந்தார்.
கடந்த சனிக்கிழமை அவர் வீடு திரும்பாததால் அவருடைய மனைவி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கடைக்குச் சென்று பார்த்திருக்கிறார். அங்கு அவருடைய கணவர் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
Advertisement
Advertisement
இது குறித்து அவர் போலீஸூக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவருடைய உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ""உயிரிழந்த வெங்கட் ரெட்டியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரோ சிலர் தாக்கிக் கொன்றிருக்கக் கூடும் எனக் கருதுகிறோம்.
குற்றவாளிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.