முகப்பு
உலகம்

கிழக்கு தைமூரில் இருந்து வெளியேறியது ஐ.நா. படை

கிழக்கு தைமூர் நாட்டில் இருந்து ஐ.நா. அமைதிப்படை திங்கள்கிழமை முழுமையாகத்

Updated On : 1 ஜனவரி 2013, 1:19 am IST
பகிர்:

கிழக்கு தைமூர் நாட்டில் இருந்து ஐ.நா. அமைதிப்படை திங்கள்கிழமை முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டது.

கிழக்கு தைமூரில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஐ.நா. அமைதிப்படை படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது. இறுதிக்கட்டமாக 2012ஆம் ஆண்டின் இறுதிநாளான திங்கள் கிழமை 1,500 அமைதிப்படை வீரர்கள் தைமூரில் இருந்து விடை பெற்றனர். "தைமூர் மக்களும், அதன் தலைவர்களும் இனிவரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு உள்நாட்டு போலீஸôர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, ஐ.நா. அமைதிப்படை திரும்பப் பெறப்பட்டுள்ளது' என்று தைமூருக்கான ஐ.நா. ஒருங்கிணைந்த திட்ட (யுஎன்எம்ஐடி) தலைவர் ஃபின் ரெஸ்கே நீல்சன் தெரிவித்தார்.

தென்கிழக்காசியக் கடலின் தென் பகுதியில் தைமூர் தீவு அமைந்துள்ளது. கிழக்கு தைமூர் தனி நாடாகவும், மேற்கு தைமூர் இந்தோனேசியாவின் ஒரு மாகாணமாகவும் அமைந்துள்ளன.

Advertisement

Advertisement

24 ஆண்டுகளாக இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு தைமூர், ஐ.நா. தலையீட்டால் பொது வாக்கெடுப்பு மூலம் 1999ஆம் ஆண்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. போர், வறுமை, நோய் உள்ளிட்டவற்றால் அக்காலகட்டத்தில் 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.