துருக்கிப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சு-24 ரக விமானத்தின் 2வது விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி-சிரிய எல்லையில் ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் துருக்கிப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அப்போது, இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் வெளியே குதித்து தப்பினர். ஆனால், அவர்களில் ஒருவரை துருக்கிப் படை சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், மற்றொரு விமானி சிரியா ராணுவத்தால் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.