இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 71 பேர் பலியாகி உள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கைபர்-பக்துன்குவா, கில்கிட்-பல்திஸ்தானில் ஆகிய மாகாணத்தில் உள்ள வீடுகள் பலத்த சேதமடைந்ததுள்ளன. 370-க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டு போயின.
கைபர்-பக்துன்குவா மாகாணத்தில் 48 பேரும், கில்கிட் பல்திஸ்தானில் 15 பேரும் ஹங்லா மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கில்கிட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் இழந்த நிலையில் மக்கள் தவிர்த்து வருவதாக டான் செய்திகள் கூறுகின்றன.
மார்ச் 9 முதல் ஏப்ரல் 5 வரை 212 பேர் காணாமல் போனதாகவும், 188 பேர் காயமடைந்ததாகவும், 1428 பேர் வீடுகள் இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் உணவு, உடை, போர்வை உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.