முகப்பு
உலகம்

மாஸ்கோ மணல் சிற்ப போட்டி: தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் சுதர்சன் பட்நாயக்

மாஸ்கோ மணல் சிற்ப போட்டியில், இந்தாண்டு பரிசை தட்டிச் சென்றுள்ளார் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

Updated On : 28 ஏப்ரல், 2016 at 12:35 PM
பகிர்:

மாஸ்கோ (ரஷ்யா): மாஸ்கோ மணல் சிற்ப போட்டியில், இந்தாண்டு பரிசை தட்டிச் சென்றுள்ளார் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

2016-ம் ஆண்டுக்கான 9-வது மாஸ்கோ மணல் சிற்ப போட்டி ஏப்ரல் 21 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

உலக அளவில் முதல் 20 இடங்களில் இருக்கும் புகழ்பெற்ற மணல் சிற்பக்  கலைஞர்களும், சர்வதேச அளவில் 50 மணல் சிற்பக் கலைஞர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Advertisement

இதில், மகாத்மா காந்தியின் படத்தை 15 அடி உயரத்தில் அகிம்சை மற்றும் சமாதான செய்தியைச் சித்தரிக்கும் வகையில் உலக அமைதி என்று மணலில் வடிவமைத்து, இந்தாண்டுக்கான தங்கப்பதக்கத்தை வென்று பட்நாயக் சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.