நேபாளத்தில் 11 பயணிகள் மற்றும் 2 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த சிறிய ரக பயணிகள் விமானம் காளிகோட் மாவட்டத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்தனர்.
கஸ்தமந்தாப் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், ஜூம்லா மாவட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் எத்தனை பயணிகள் காயமடைந்தனர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் தாரா விமானம் விபத்தில் சிக்கி 23 பயணிகள் பலியான நிலையில், இந்த விபத்து நேரிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.