உலகம்

தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை நிகழ்த்தினர். இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் எட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT