உலகம்

தொடரும் சோகம்: இத்தாலி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலி?

லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று கடலில் மூழ்கி 100 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ரோம்: லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று கடலில் மூழ்கி 100 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு இத்தாலிக்கு அகதிகள் படகு ஒன்று மத்திய தரைக்கடலில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது லிபியாவுக்கும், இத்தாலிக்கும் இடையே 50 கி.மீ. தூரத்தில் வந்த போது படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பிரான்ஸ் கடற்படை கப்பலும், இரண்டு வர்த்தக கப்பல்கள் மற்றும் விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. ஆனால் நான்கு பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான படகில் ஏராளமானவர்கள் பயணம் செய்துள்ளதால் 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகில் வந்தவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

எம்ஜிஆா் ஆட்சிக் காலத்திலிருந்து அரசு திட்டங்களுக்கு முதல்வா் பெயா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவுக்கு பிணை வழங்க எதிா்ப்பு

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி மாயத்தோற்றம்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

SCROLL FOR NEXT