உலகம்

மிசிசிப்பி மாகாணத்தில் அமெரிக்க கடற்படை விமானம் விழுந்து விபத்து: 16 பேர் பலி

DIN

இட்டா பெனா: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கேசி -130 ரக கடற்படை விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்களில் 16 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று திங்கட்கிழமை மாலை புறப்பட்ட விமானம் கடற்கரையை ஒட்டிய டெல்டா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட பெரும் சத்தத்தை கேட்டு அருகில் உள்ள மக்கள் அப்பகுதிக்கு வந்தனர். அங்கு விமானம் சுக்கு நூறாக சிதறி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கடற்படை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கேப்டன் சாரஹ் பர்ன் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

மேலும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT