இந்திய மருத்துவ மாணவர் வங்கதேசத்தில் குத்திக் கொலை!
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் செயல்பட்டு வரும் மருத்துவ தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இந்திய மாணவர் அதீஃப் ஷேக் என்பவர் வெள்ளிக்கிழமைஇரவு குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து டாக்கா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:
சிட்டகாங்கின் அப்துல் ஹமீது சாலையில் அமைந்துள்ள லேக்வியூ அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு கூரிய பொருளால் கழுத்துப் பகுதியில் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
அதே குடியிருப்பில் அதீஃப் உடன் மேலும் 3 இந்திய மாணவர்களும் தங்கியுள்ளனர். அவர்களும் சிட்டகாங் மருத்துவ தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகின்றனர் என்றார்.