உலகம்

பாகிஸ்தான் பெட்ரோல் லாரி விபத்தில் பலி எண்ணிக்கை 160-ஆக அதிகரிப்பு

DIN

பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 160-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பெட்ரோல் லாரி வெடித்துச் சிதறியதில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் முல்தான், ஃபைசலாபாத், லாகூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த ஒன்பது பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். இதில், நான்கு சிறுவர்களும் அடங்குவர்.
இதையடுத்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 160-ஆக அதிகரித்தது.
மேலும், 60 சதவீதம் வரை தீக்காயமைடந்த 40 பேரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும் உடனடியாக வழங்க பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT